பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளத்தில், தேவா (27) என்ற கூலித்தொழிலாளியை அவரது மனைவி இந்திராணி (26) கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி தேவா காணாமல் போனதாக அவரது தாயார் புகார் அளித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இந்திராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தனது சித்தி கணவர் வினோத்குமாருடன் இருந்த கள்ளத்தொடர்புக்கு தேவா இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்து, உடலை கரூர் ரயில்வே தண்டவாளத்தில் வீசியதாக இந்திராணி தெரிவித்துள்ளார்.




