சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி.ரால்ஹன் கூறுகையில், இந்த வரி விதிப்பால் சீன ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, அமெரிக்க சந்தையில் சீனப் பொருட்களின் விலை உயரும். இதனால் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க மக்களின் கவனம் திரும்பும். 2024-25-இல் அமெரிக்காவுக்கு ரூ.7.6 லட்சம் கோடிக்கு இந்தியா ஏற்றுமதி செய்து என தெரிவித்தார்.




