சீயக்காய் பொடியும்..!! அதில் உள்ள எண்ணற்ற மருத்துவ பயன்களும்..!!

Oplus_131072

சீயக்காய் பொடி கிருமிக் கொல்லியாகவும், புண்களை ஆற்றுவித்து, சீழ்பிடிக்காமல் வற்றச் செய்யும் மருத்துவக் குணமும் கொண்டதாகும்.
செப்டிக் புண்களையும், சீழ் வடியும் ரணங்களையும், சீயக்காயினால் கழுவி வர அவை விரைந்து ஆறும்.
தலைமுடியில் அழுக்குப்படிந்து சிக்கு ஆகிவிட்டால் சீயக்காயினை அரைத்துப் புழுங்கலரிசி வடித்த கஞ்சியில் குழைத்து தலை சிக்கு மீது தேய்த்து வெந்நீரில் குளிக்க சிக்குகள் விலகி முடி மென்மை பெறும்.
தலைமுதல் கால்வரை அழுக்குகளை நீக்கிக் சுத்தப்படுத்தும் சீயக்காய் இயற்கை தந்த இனிய ஷாம்பூ ஆகும்.
#சீயக்காய்_தயாரிக்கும்_முறை:
நென்னாரி வேர் – 1 பிடி
சந்தன சக்கை – 1 பிடி
ரோஜா மொக்கு – 5 பிடி (உலர்ந்தது)
ஆவாரம்பூ – 5 பிடி(உலர்ந்தது)
பச்சை பயறு – 2 பிடி
வெந்தயம் – அரை பிடி
சீயக்காய் – 1 கிலோ
இவை யாவும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.
இவற்றை ஒருநாள் வெய்யிலில் உலர்த்திப் பின் மிஷனில் அரைத்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தித் தினசரி குளிக்கும்போது பயன்படுத்தலாம்.
சீயக்காய், ஷாம்பூபோல் நுரை வரவேண்டும் என்றால், அதனுடன் பூவந்திக் கொட்டையின் தோலினை 2 பிடி உலர்த்தி சேர்த்து அரைத்தால் ஷாம்பூபோல் நுரை வரும்.
இதனை சீயக்காய் தூளுடன் சேர்த்தும் உபயோகப்படுத்தலாம்.
வேறு முறை.
வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது எப்படி?
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) – 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) – 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) – 3 கப் அளவு
வெந்தயம் – உடலை குளிர்ச்சியாக்க
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை.

Read Previous

சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து..!! 440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்..!!

Read Next

உணவுக் கட்டுப்பாட்டில் செய்யக் கூடாத தவறுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular