தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் தினத்தன்று வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியம் (79), அத்தொகுதியில் திமுகவினர் விதிகளுக்குப் புறம்பாக மஞ்சள் நிற பூத்சிலிப்புகளை விநியோகம் செய்வதாகக் குற்றம்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டார். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர், காலவரை தாக்கியதாக கூறப்படுகிறது




