இரண்டு நாட்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசும் பொருளாக அமைந்திருப்பது செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் ராஜினாமா தான். இவர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வார்களா என்றும் மக்களின் குரல் என்னவாக இருக்கும் என்றும் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
அந்த வகையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் SC காட்டிய கெடுபிடியால் செந்தில் பாலாஜியும் சைவம் மற்றும் வைணவம் குறித்த பேச்சு சர்ச்சையானதால் பொன்முடியும் அமைச்சர் பதவியை இழக்க வேண்டியதாக மாறிவிட்டது.
இவர் இரண்டு பேரின் ராஜினாமா கடிதங்களையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டு உள்ளார். அதுமட்டுமில்லாமல் மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் அவர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறார்.




