மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜவஹர்புரா கிராமத்திற்கு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது லாரி ஒன்று திடீரென மோதியது. இக்கோர விபத்தில், 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அதிகாலை சுமார் 5 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




