தமிழகத்தில் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு..!! ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்..!!

தமிழக சுங்க சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 40  சுங்க சாவடிகளில் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து சுங்க கட்டணம் உயர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், முதற்கட்டமாக வானகரம். செங்கல்பட்டு, பரனூர், திண்டிவனம், ஆத்தூர், சூரப்பட்டு மற்றும் பட்டறைப்பெரும்புதூர்  உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து சுங்கக்கட்டணம் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுங்க சாவடிகளில் வாகனகங்களுக்கு ஏற்ப ரூ. 5 லிருந்து ரூ. 25 வரை சுங்கக்கட்டணங்களை உயர்த்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

அப்பா, அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டு போகும் பெண்களுக்கு இந்த பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

ஆசிரியர் தேர்வுகளுக்கான ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு..!! 7,535 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular