தலைமுடி உதிர்வை தடுக்க இந்த மூன்று வழிகளை மட்டும் பின்பற்றுங்கள் போதும்..!!
இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான் தலை முடி உதிர்வு. இதற்கு முதல் காரணம் ஆரோக்கியமான உணவு முறை என்பது நம்மில் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தலைமுடி உதிர்வை தடுக்க உதவும் மூன்று வழிகள் என்னென்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தலைமுடி உதிர்வை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும் அதுமட்டுமின்றி கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊற வைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வு நிற்கும். வெந்தயம் மற்றும் குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வு நிற்கும். கண்டிப்பாக இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க.




