வேலூரில் தாய் வீட்டு விருந்துக்கு வந்த புதுப்பெண் விஜயசாந்தி (24) பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருமணமான 4 நாட்களே ஆன நிலையில், கணவருடன் தாய் வீட்டுக்கு வந்தவர், மாடுகளை கட்டிவிட்டு வருவதாக கூறி சென்று பூச்சி மருந்தை குடித்தார். வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. வரதட்சணை கொடுமையா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.




