கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை கட்டிபோட்டு, 200 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் வருவது போன்று வீடு புகுந்து அடித்துக் கொலை செய்து கொள்ளையடிக்கும் கும்பல், தற்போது வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளையடித்துள்ளனர்.




