நடிகை ராதிகா சரத்குமார் “டெங்கு” காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ராதிகாவின் மேலாளர் கண்ணதாசன் தகவல் தெரிவித்துள்ளார்.




