புதிய ஒருங்கிணைப்பி ஓய்வூதிய திட்டத்தில் இருந்து தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் ஒரு முறை மாறினால், மீண்டும் புதிய திட்டத்திற்கு மாற முடியாது. பணி ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டம் அமலுக்கு வந்து 2 வாரம் ஆகியும், இதில் இணைய அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை.




