நாளை (ஆக.27) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிள்ளையார் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




