தமிழகத்தில் நூறு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இருப்பதாக அமைச்சரு உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
நூறு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 10 நேற்று நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவச் செல்வங்களுக்கு பள்ளி உபகரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை பரிசு பொருட்கள் வழங்கிய பின்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார், அந்த நிகழ்ச்சியில் நூறு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார், மேலும் விளையாட்டு துறையில் உள்ள பலரும் உலக சாதனை படைத்து தமிழகத்திற்கு மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மாறும் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார், மாணவ மாணவிகள் படிக்கும் காலங்களில் சிறந்த முறையில் கல்வி கற்ற தங்களின் கல்வித் திறனின் அறிவை கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்று பேசி உள்ளார்..!!




