நேர்மை..!! ஒரு அழகான நேர்மை பற்றிய கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

 

சீனாவில் ஒரு ராஜா இருந்தார். ஆளுமையும், அன்பும் கொண்டவர். அவருக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே ஒரு தேர்வு மூலம் தனது வாரிசைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.

அந்த நாட்டிலிருந்த எல்லா சிறுவர்களிடமும் கொஞ்சம் விதைகளைக் கொடுத்தார். இதை நன்றாகப் பராமரித்து வளர்த்து ஒரு வருடம் கழித்து கொண்டு வந்து காண்பிக்கச் சொன்னார்.

தோட்டக் கலையில் ஆர்வம் கொண்ட பிங்-குக்கும் விதைகள் கிடைத்தன. அவனும் கவனமாக ஒரு தொட்டியில் விதைகளைப் போட்டு நீர் ஊற்றினான். ஆனால் அதிலிருந்து ஒன்றும் முளைக்கவில்லை. வாரங்கள், மாதங்கள் கடந்த பின்பும் மண்ணிலிருந்து ஒரு சலனமும் இல்லை.

ஆனால் மற்ற பிள்ளைகள் தொட்டியிலிருந்தெல்லாம் அழகான செடி கொடிகள் வளர்ந்தன. மொட்டுக் கட்டி, வண்ணமயமாகப் பூத்துக் குலுங்கின.

பிங்-தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றினான். வெயிலில் வைத்து, நிழலில் வைத்து உரம் போட்டுப் பார்த்தான். தனக்கு மட்டும் மூங்கில் விதைகள் வந்துவிட்டதோ? என்று கவலைப்பட்டான்.

ராஜா வைத்தக் கெடு முடிந்தது. எல்லோரும் சிறிதும் பெரிதுமாக வளர்ந்த செடிகளோடு வந்திருந்தனர். பூத்தும், காய்த்தும், நறுமணம் பரப்பியும் அவை நின்றிருந்தன.

தன் வெற்றுச் சட்டியுடன் ஒரு ஓரமாக நின்றிருந்தான் பிங். ஆனால் ராஜா அவனைத்தான் முதலில் அழைத்தார்.

‘ஒரு நாட்டின் தலைவனாவதற்கு முதல் தகுதி, நேர்மை. நேர்மையை ஒப்புக்கொள்ளும் துணிவும் அவசியம் வேண்டும். அது இரண்டும் இச்சிறுவனிடம் மட்டுமே இருக்கிறது.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட விதைகள் யாவுமே வெந்நீரில் போட்டுக் கொதிக்கவைக்கப் பட்டவை. அவை முளைப்பத்தறகாக அல்ல உங்கள், நேர்மையைப் பரிசோதிப்பதற்காகவே கொடுக்கப்பட்டவை!’ என்றார் ராஜா.

அழகழகான கலப்படப் பூச்செடிகளுக்கு நடுவே நேர்மை எனும் வெற்றுச் சட்டியை ஏந்தி வந்த பிங் இளவரசனாக முடிசூட்டப்பட்டான்.

Read Previous

வாழை இலையில் ஏன் தண்ணீர் தெளிக்கிறோம்..?? உள்பக்கமா மடிக்கிறோம் தெரியுமா..??

Read Next

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular