நைஜீரியாவில், பெட்ரோல் லாரி வெடித்து 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி , கட்சா பகுதியில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்து தீப்பிடித்ததில் லாரி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றவர்கள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்கள் என 35 பேர் உயிரிழந்தனர்.




