Oplus_131072
நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்
தேவையான பொருள்
தண்ணீர் 250 மி.லி
மிளகு 5 எண்ணிக்கை
இலவங்க பட்டை சிறிதளவு
இஞ்சி சிறிய துண்டு
எலுமிச்சை அரைத்துண்டு
துளசி இலை 10 எண்ணிக்கை
கிராம்பு 4 எண்ணிக்கை
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
இஞ்சி,இலவங்கப்பட்டை மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்து தண்ணீர் உடன் சேர்த்துக்கொள்ளவும்.
மேலும் தண்ணீர் உடன் துளசி இலை மற்றும் 4 கிராம்பு சேர்த்துக்கொள்ளவும்.
மேலும் நீரை பாதியளவு ஆகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இப்போது சுவையான மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.
இதனை தொடர்ந்து காலை நேரங்களில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.




