உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில், பெண்கள் மட்டும் அடங்கிய கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பெண்கள் லக்னோவின் கோமதி நகரில் பயணிகளாக நடித்து, இ-ரிக்ஷாக்களில் பயணிக்கும் பெண்களிடம் நகை, பணம், செல்போன்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது கைதான இவர்களிடம் 3 தங்கச் சங்கிலிகள், 1 நெக்லஸ் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். போலீசாரிடம் சிக்கிய பெண்கள் ஜோதி, மாலா, அர்ச்சனா, லட்சுமி நீது, வந்தனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




