கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்த ஆர்.டி.மீரா ராகவ், ஒன்பது வயதிலிருந்தே கலாஷேத்ரா பாணி பரதக் கலையில் பயிற்சி பெற்று வருகிறார். குறுகிய காலத்தில் 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 2021-ல் அரங்கேற்றம் செய்த இவர், மலேசியாவில் நடைபெற்ற அகில உலக நடனப் போட்டியில் ‘இன்டர்நேஷனல் டான்சர்’ விருது வென்றார். ஆறு முறை உலக சாதனை நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.




