பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரையிலும் கடைகளில் வாங்கும் ஜூஸ் பாட்டிலில் எடுத்துக்காட்டாக மாசா செவன் அப் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை இன்றளவும் பலர் கொண்டுள்ளனர். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் மற்றும் ஃபுட் கண்டெய்னர்களை பயன்படுத்துகிறோம். இதில் உள்ள ரசாயனமான BPA காரணமாக ஹார்மோன் சீர்குலைவு மற்றும் நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலின் சென்சிட்டிவிட்டியை குறைக்கிறது. மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. பிளாஸ்டிக் பாட்டிலால் இதய பாதிப்புகள் ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வகம் தெரிவித்துள்ளது. மேலும் புற்றுநோய் மற்றும் விந்தணு மற்றும் கருச்சிதைவு உள்ளிட்டவைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நம் உடல் நலத்திற்கு உத்தரவாத மற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.




