ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 21 வயது பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கடந்த வாரம் நர்ஸ் பணிக்காக வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தபோது, உடன் இருந்த பெண்ணின் தங்க மோதிரத்தை திருடி இருக்கிறார். இதனை சிசிடிவி வாயிலாக கண்டறிந்த விடுதி ஓனர், போலீசிடம் புகார் கொடுப்பதாக மிரட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பெண்ணின் நண்பர்கள் முயற்சியின் பேரில் விடுதி ஓனருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.




