உத்தரப் பிரதேசத்தில், மனைவி பிரீத்தி மற்றும் மருமகன் அபய் ஆகியோர் சேர்ந்து கணவர் ஓம்பலைக் கொலை செய்துள்ளனர். இது இயற்கை மரணம் என மனைவி கூறிய நிலையில், இறந்தவரின் சகோதரரின் 12 வயது மகள் நள்ளிரவில் அத்தையும், அபய்யும் சேர்ந்து மாமாவை கழுத்தை நெரித்துக் கொன்றதைக் கண்டதாகக் கூறினார். போலீஸ் விசாரணையில், பிரீத்திக்கும் அபய்க்கும் இருந்த கள்ள தொடர்புக்கு, ஓம்பல் தடையாக இருந்ததால் கொலை நடந்தது கண்டறியப்பட்டது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.




