மலேசியாவில் ‘XFG’ என்ற புதிய வகை கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதாக இன்று (அக். 16) தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரே வாரத்தில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14-லிருந்து 97ஆக அதிவேகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர்.




