மகாராஷ்டிராவில் பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் மற்றும் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கழிவறையில் ரத்த கறை இருந்ததையடுத்து, மாணவிகளிடம் இது குறித்து ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். மாணவிகள் யாரும் பதில் கூறாததால், 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளையும் ஆடையை களைந்து மாதவிடாய் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் பூதாகாரம் ஆன நிலையில், காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.




