வடகிழக்கு மாநிலங்களில் இன்று (செப்.14) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அசாமில் உள்ள தேகியாஜூலி பகுதியிலிருந்து 16 கி.மீ., தொலைவில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, வங்கதேசம், நேபாளம், மியான்மர், பூட்டான் மற்றும் சீனாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல், கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியில் இன்று மதியம் 2.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.




