வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது ஏன் தெரியுமா..??
வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள் அதன் காரணம் என்ன அதெல்லாம் மூடநம்பிக்கை அதெல்லாம் படுக்கலாம் என்று நம்மில் பலரும் வீட்டில் உள்ள முன்னோர்கள் கூறியதை மறுத்தும் படுத்திருப்போம். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும் அறிவியல் ரீதியான ஒரு அர்த்தம் உண்டு. அதே மாதிரி தான் வடக்கே தலை வைத்து படக்கூடாது என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பூமியின் காந்த சக்தியானது வட துருவத்தை நோக்கி நிற்கிறது. இதனால் வடதிசையில் தலை வைத்து படுக்கும் போது காந்தத்தின் ஈர்ப்பு சக்தியானது நமது மூளையும் தலையையும் தாங்குகிறது அந்த தாக்கத்தால் நமது உடலின் ஆரோக்கியத்தையும் மனநலத்தை கூட பாதிக்கும் இதனால் தான் வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்று சொல்கிறார்கள் இவற்றையெல்லாம் நம் முன்னோர்கள் வகுத்த வலிகள் மூடநம்பிக்கைகள் என நாம் நம்பி இருக்கும் அனைத்து விஷயத்திற்கு பின்னாலும் நம் முன்னோர்கள் கண்டறிந்த வாழ்வியலும் அறிவியலும் ஒளிந்து இருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்.



