தெலங்கானா: ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு அக்., 5ஆம் தேதி வந்த வீடியோ அழைப்பில் பேசிய பெண், இளைஞரின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி ரூ.2.6 லட்சம் பறித்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற மோசடிகளில் இளைஞர்களின் பணம், பொருள் பறிபோவதோடு, எதிர்காலமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல்துறை எச்சரித்துள்ளது.




