ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட்டின் மேலாளர் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி, EWS உதவித்தொகை திட்டத்தின் கீழ் PGDM படிப்புகளில் சேர்ந்த மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 32 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதில், 17 பேர் சைதன்யானந்தா ஆபாசமாக பேசியதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவரது சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




