சேலம் காடையாம்பட்டியை சேர்ந்த 18 வயது சிறுவன் அரியலூரை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி உள்ளார். சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த 5 மாதத்திற்கு முன்பு தனது வீட்டிற்கு வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியான சிறுமி தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
18 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.




