19-வது தவணை PM கிசான் நிதியுதவி..!! எப்போது வழங்கப்படும்?.. பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா’ மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 ரூபாய்  விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதாவது, இத்திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரை, ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை மற்றும் டிசம்பர் முதல் மார்ச் வரை என ஆண்டிற்கு மூன்று தவணைகளாக மொத்தம் ரூ. 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.

மேலும், தற்போது PM கிசான் நிதி திட்டத்தின் கீழ் 19வது  தவணை எப்பொழுது வழங்கப்படும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், “வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி திங்கட்கிழமை  பிரதமர் மோடி பீகாரின் பாகல்பூர் க்கு செல்வதாக தகவல்கள் ” வெளியாகியுள்ளது. எனவே, “அன்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 19 தவணை PM கிசான் நிதி வழங்குவது குறித்து பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்” என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், PM கிசான் 18 வது தவணை நிதி உதவி கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பெரும் சோகம்..!! கணவர் கண் முன்னே துடிதுடித்து மனைவி பலி..!!

Read Next

பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular