8 வருடங்களுக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைக்காதது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நியாயமான நிதியை தர மறுக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிக்குறைப்பு சரிபாதி அளவுக்கு மாநிலங்களில் பங்கிலிருந்துதான் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.




