தீபாவளி பண்டிகை என்பது அனைத்து வகையான மக்களும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தீபாவளி அன்று பல வீடுகளில் பல வழிமுறைகள் பின்பற்றி தீபாவளி பண்டிகையை தொடங்குவார்கள். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையான வியாழக்கிழமை அன்று அதிகாலை எழுந்து 4:30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நல்லெண்ணெய் குளியல் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மேலும், எண்ணெய் குளியல் குளிப்பதற்கு இந்த நேரமே மிகவும் உகந்த நேரம் ஆகும்.
பலன்கள் :
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வளையம் இருப்பதால் எதிர்மறை சக்திகளின் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது. மேலும் உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும்.




