பெரும் சோகம்..!! ரயிலில் ஏற முயன்ற எஸ்.ஐ தவறி விழுந்து பலி..!!
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுப்பில் உள்ளார். இந்த நிலையில் சென்னை செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்த அவர், பிளாட்பாரம் வழியாக செல்லாமல், தண்டவாளத்தில் இருந்து ஓடி வந்து ரயிலில் ஏறினார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி 2 கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




