இயற்கை விவசாயம் இப்போது படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது. மும்பையைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் இயற்கை விவசாயம் சார்ந்த தொழிலில் சாதித்து வருகிறார். காவ்யா தோபாலே என்ற அப்பெண் செவிலியர் மும்பையில் பிரபலமான சயான் மாநகராட்சி மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். ஆனால் தற்போது அவர் தனது கிராமத்தில் இப்போது மண்புழு உரம் தயாரித்து மருத்துவமனையில் கிடைத்த சம்பளத்தை விட அதிக அளவில் சம்பாதித்து வருகிறார்.




