படித்ததில் சிரித்தது..!! சோகமா இருக்கீங்களா அப்ப கண்டிப்பா இந்த பதிவை படிங்க சிரிச்சிடுவீங்க..!!

 

 

ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.

இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் ‘குட் ஈவ்னிங் சார்..

அவர் ” குட் ஈவ்னிங், ஏதாவது பிரச்சனையா? ”

போலிஸ், “நாங்கள் உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்…… நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.”

அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 ரூபாய்க்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்’.

அவரும் சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், “இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும் “என்று சொன்னார்.

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி “சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்”‘ என்றார்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், “நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்…

Read Previous

மிளகுல இம்புட்டு விஷயம் இருக்கா..!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

Read Next

சமையல் குறிப்புகள்..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் இல்லத்தரசிகளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular