Oplus_131072
குழந்தை உண்டாக வருடம் தள்ளிப் போகிறவர்கள் கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க குழந்தை உண்டாகும்..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை குழந்தை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் பொக்கிஷமான ஒன்று. இந்த பொக்கிஷமான குழந்தை வரம் ஒரு சிலருக்கு திருமணம் ஆன உடனே கிடைத்துவிடும். ஒரு சிலருக்கு இரண்டு வருடங்களாகி கிடைக்கும். ஒரு சிலருக்கு ஐந்து வருடங்கள் ஆகி கிடைக்கும். ஒரு சிலருக்கு 10 வருடங்களாகி கூட கிடைக்கலாம். ஒரு சிலர் பத்து வருடம் ஆகியும் அந்த பொக்கிஷம் எப்போ நமக்கு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். பொதுவாகவே இந்த பதிவின் மூலம் அனைவருக்கும் கூறும் அறிவுரை என்னவென்றால், புதிதாக திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் சரி திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி இருப்பவர்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் நாம் ஒருபோதும் இன்னும் குழந்தை இல்லையா என்ற கேள்வியை மட்டும் கேட்கக் கூடாது. இது நாகரிகம் அல்ல அது மட்டும் இன்றி இவ்வாறு நாம் கேட்கும் கேள்விகள் அவர்களின் மனது எவ்வளவு புண்படும் என்று அவர்களுக்குத்தான் தெரியும். இந்நிலையில் குழந்தை உண்டாக வருடம் தள்ளிப் போகிறவர்கள் கண்டிப்பா இந்த மெத்தடை ட்ரை பண்ணுங்க அடுத்த வருஷமே உங்க கையில குழந்தை இருக்கும்.
யானை நெருஞ்சி செடியை அதனுடைய முள் இலை காம்பு அனைத்தையும் 2 1/2 டம்ளர் நீரில் போட்டு மிதமான தீயில் மெதுவாக கொதிக்கவிட்டு அது இரண்டு டம்ளர் நீராக வற்றி வரும் வரை கொதிக்க விட வேண்டும். பின்பு அதை எடுத்து இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் கணவன் மற்றும் மனைவி இருவரும் குடிக்க வேண்டும். இதேபோன்று பகல் முழுவதும் வைத்த நீரை இரவு சாப்பாட்டுக்கு பின் கணவன் மனைவி இருவரும் தொடர்ந்து இவ்வாறு குடிக்க விரைவில் கரு உண்டாகும். மற்றும் நீர்க்கட்டி பிரச்சினைகளால் குழந்தையின்மை என்ற பிரச்சனை இருந்தால் கூட இது சரி செய்யும். இந்த மெத்தடை ஃபாலோ பண்ணியும் கரு உண்டாகவில்லை என்றால். 40 நாள் இருவரும் சேராமல் இருந்து பிறகு சேர்ந்தால் கரு உண்டாகும் என கூறப்படுகிறது. 40 நாளும் தொடர்ந்து இந்த நீரை குடித்து விட வேண்டும்.




