கலவை சாதம் கலக்கலாக செய்ய கண்டிப்பா இந்த டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த காலகட்டத்தில் தாய்மார்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் தினமும் லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது மிகப் பெரிய பிரச்சனை. ஒரு சிலருக்கு இது சாதாரணமாக இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று தோன்றலாம் ஆனால் சமைப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும். இந்நிலையில் லஞ்ச் பாக்ஸ் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கலவை சாதம் தான். இந்நிலையில் கலவை சாதத்தை சூப்பராக செய்ய சில டிப்ஸ் எல்லாம் இருக்கிறது. அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தேங்காய் சாதம் செய்யும் போது சிறிதளவு வெள்ளை எள் வறுத்து பொடி செய்து கலந்தால் மனமாகவும் சுவையாகவும் இருக்கும்.
தக்காளி மற்றும் எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதம் ஆகியவற்றை செய்யும் போது நல்லெண்ணெய் ஊற்றி கிளறிய பிறகு செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும். தக்காளி சாதம் செய்யும் போது சிறிதளவு கடுகு மற்றும் சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து சேர்த்தால் சுவையும் மனமும் அதிகமாக இருக்கும்.




