அப்போதுள்ள காலத்தில் நமது முன்னோர்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருந்து வந்தார்கள் என நமக்கு தெரியும். ஆனால் நம்மால் அப்படி இருக்க முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் நமது உணவு முறை. அவர்கள் சமைப்பதற்கு மண் பாண்டங்கள் பயன்படுத்தினர். அதானால் அவர்கள் உண்ணும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனால் இன்றைய நாகரிக உலகில் பொதுவாக அனைவர் வீட்டிலும் குக்கர் தான் உள்ளது.
இந்த குக்கரில் சமைத்து பரிமாற படும் உணவு நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவம் தீங்கு விளைவிக்கும். குக்கரில் சமைக்கும் போது அந்த சத்துக்கள் சாப்பாட்டில் முழுமையாக இருந்து விடும். மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்க படுவதுமில்லை. அதனால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருக்கும். இதனால், தீடிரென இரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு.
மேலும், இதனால் சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நன்கு வேக வைத்து, கஞ்சீ நீங்கப்பட்ட உணவுதான் நமது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்கும்.
நீண்ட நேரம் பாத்திரத்தில் வெந்த உணவை நாம் சாப்பிடுவது நல்லது. குக்கரில் வேகும் சாதமானது மிகவும் விரைவில் வெந்துவிடுவதால் நாம் உண்ணும் பொது அதிக சாதம் தேவை படுகிறது. அதிக சாதம் உட்கொள்வதால் தேவை இல்லாத வியாதிகள் நம்மை நெருங்கும் அபாயம் அதிகம். எனவே குக்கரில் சமைப்பதை இன்றே நிறுத்திவிடுங்கள்.




