தமிழ்நாட்டின் 10 இடங்களில் இன்று ஏப்.25 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை விமான நிலைய பகுதியில் 104.9 °F அளவுக்கு வெயில் கொளுத்தியது. மேலும், திருச்சி, வேலூரில் தலா 104°F, ஈரோடு, சேலம், மதுரை நகரம் தலா 103°F வெப்பநிலையும், திருத்தணி, தருமபுரி தலா 101, தஞ்சையில் 100 டிகிரி வெயில் பதிவாகியது.




