இருபது வயது ஏழை பெண் மாங்கல்யம் வாங்க நகை கடைக்கு சென்றிருந்தாள்…
தான் வாங்கும் சொற்ப சம்பளத்தில் சிறுகச்சிறுக சேமித்து அரை பவுனுக்கு தாலி வாங்குவது அவளது ஆசை..
ஒவ்வொன்றாக உற்று பார்த்து விட்டு கடைசியில் அவளுக்கு பிடித்தமான ஒன்றை வாங்க முடிவு செய்தாள்…
கடைக்காரர் தாலியை
சாமி படத்தின் முன் வைத்து கும்பிட்டு ,
என்னம்மா,
உனக்கு கல்யாணமா??
என்று சிரித்தபடி கேட்டார்..
அதற்கு அவள்,
இல்லங்க, இது எனக்கில்ல…
எங்க அம்மாவுக்கு…
எங்க அம்மாவை நான் சின்ன வயசுலருந்து வெறும் கழுத்துல, மஞ்ச கயிறோட தான் பாத்திருக்கேன்…
தங்கம் எல்லாம் போட்டு பாத்ததே இல்ல சார், என்னோட ஆசையே எங்கம்மாவிற்கு தங்கத்துல மாங்கல்யம் வாங்கி போட்டு விடணும்தான்…
கடைக்காரர் நெகிழ்ந்து விட்டார்… நல்லாரும்மா, எனக்கூறி நகைக்கான பணத்தில் கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் தனக்கான இலாபத்தை குறைத்துக் கொண்டு ஆசிர்வதித்து அனுப்பினார்…
அந்த பெண்ணுடைய அம்மாவின் வளர்ப்பு, அந்தப்பெண்ணின் உழைப்பு, கடைக்காரரின் மனிதாபிமானம் எல்லாம் சரியான நேரத்தில் ஒன்று சேர்ந்தது…



