தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. 40% மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடலில் 40% மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி பதவி உயர்வும் தரப்படவுள்ளது.




