திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி சுமன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, பதவி பறிபோனதால் கோபத்தில் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோரை தேடி வருகின்றனர்.



