திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று (ஜூன் 28) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது, “ நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றிணைந்து நிற்போம். நம்மை அடக்க நினைத்தால் ஒன்றிணைந்து எதிர்ப்போம். இது தமிழர்களின் தனி குணம். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் திரட்டுவதற்கான முயற்சி. ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? நாம் உதயசூரியன்” என்றார்.




