உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில், ஐபோனுக்காக 19 வயது இளைஞர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞர், தனது மாமாவின் திருமண நிகழ்ச்சிக்காக ஐபோன் கொண்டுசென்றுள்ளார். இதனைப் பார்த்த 2 சிறுவர்கள், இளைஞரை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி, தலையை செங்கலால் நசுக்கிக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இன்ஸ்டாவில் ரீல்ஸ்கள் போடுவதற்காக ஐபோனை கொள்ளையடித்துள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.




