திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா, யார், யார் எல்லாம் அணியலாம், எப்போது அணியலாம், அணியக் கூடாது என்ற விதிகள் இதோ..!!

Oplus_131072

ருத்ராட்சம் அணிவதால் பல்வேறு நற்பலன்கள் உண்டு என அறிந்த பலர், அதை யார் எல்லாம் அணியலாம், எத்தனை முக ருத்ராட்சம் அணியலாம், திருமணமானவர்கள் அணியலாமா என பல்வேறு கேள்விகள் தங்கள் மனதில் எழுவது உண்டு.

ஒன்று முதல் 38 முக ருத்ராட்சங்கள் வரை முன்பு இருந்தன. ஆனால் தற்போது 1 முதல் 21 வரை ருத்ராட்சங்கள் தான் கிடைக்கப்படுகின்றது.

அதிலும் 5 மற்றும் 6 முக ருத்ராட்சங்கள் தான் அதிகளவில் கிடைக்கப் பெறுகின்றன. ஏனைய முக ருத்ராட்சங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. இதனால் பல வியாபாரிகள் அந்த மாதிரியான ருத்ராட்சங்களை போலியாக தயார் செய்து விற்பனை செய்தும் வருகின்றனர்.

பல்வேறு பலன்களை அளிக்கும் ருத்ராட்சத்தை உண்மையானது தானா என சோதித்து வாங்குவது அவசியம்.

ருத்ராட்சம் அணியும் முன் ஒவ்வொரு வாருக்கும் பல கேள்விகள் எழுவது உண்டு.

திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா, அசைவம் சாப்பிடலாமா, எத்தனை முக ருத்ராட்சம் அணியலாம் என்ற கேள்விகள் எழுகின்றன.

தெய்வீக சக்திகள் கொண்ட ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்களும் அணிந்து பயன்பெறலாம்.

முந்தைய காலத்தில் சைவ சமயம், வைணவ சமயம், சமணர்களுக்கு இடையே பல பிரச்னைகள் நிலவி வந்தது.

அந்த காலத்தில் சமணர்கள் சைவர்கள் வாழும் பகுதியை கைப்பற்ற அவர்கள் பின்பற்றி வந்த ஒழுக்க நெறிகளை சீர்குலைக்க நினைத்தனர். அப்படி சைவர்கள் சிவனின் அம்சமான ருத்ராட்சத்டை அணிவதை நிறுத்த சில வதந்திகளை கிளப்பிவிட்டனர்.

அதாவது திருமணம் ஆன ஆண் பெண் தாம்பத்தியம் கொள்வதால் ருத்ராட்சம் அணியக் கூடாது என கூறினர். ருத்ராட்சம் அணிந்தவர் சாமியாராக சென்றுவிடுவார் என கூறினர்.

ஆனால் இயற்கையாக நடக்கும் எந்த நிகழ்வின் போதும் நாம் ருத்ராட்சம் அணிந்திருப்பது தவறில்லை.

சிவாலங்களில் தினமும் பள்ளி எழுச்சி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள் . அதாவது இரவில் சிவனும் அம்பாளும் ஒரு ஊஞ்சலில் ஒன்றாக இருப்பதைப் பார்க்க முடியும்.

பின்னர் மீண்டும் காலையில் சிவனையும், அம்பாளையும் அவரவர் இடத்திற்கு கொண்டு சென்று வைத்துவிடுவார்கள். அதன் காரணம் சிவனும் அம்பாளும் சேர்ந்து இருப்பதாக அர்த்தம் அப்போது கூட சிவ பெருமான் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார். அதனால் நாமும் இரவில் அணிந்திருப்பது தவறில்லை. திருமணம் ஆனவர்கள் அணிந்திருந்தாலும் தவறில்லை.

ருத்ராட்சம் அணிந்த இறைவனே குடும்பமாக இருக்கும் போது, நாம் திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா என்ற கேள்வி கேட்பது அர்த்தமற்றது.

ருத்ராட்சம் அணிபவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். தினமும் குளிக்க வேண்டும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும், போதை வஸ்துக்களை பயன்படுத்தக் கூடாது. இது போன்ற சுத்தத்தை கடைப்பிடிப்பது அவசியம்.

இல்வாழ்க்கைக்கும், ருத்ராட்சம் அணிவதற்கும் தொடர்பு இல்லை. ருத்ராட்சம் அணிவதால் தீய எண்ணங்கள், திருஷ்டி, வக்கிர பார்வைகள் நீங்கும். தைரியம் பிறக்கும்.
ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அணிவது தவறில்லை.

எப்போது அணியக் கூடாது:

சுப நிகழ்ச்சியின் போது ருத்ராட்சம் அணிவது சிறப்பு. ஆனால் இறப்பு போன்ற அசுப காரியங்களில் கலந்து கொள்ளும் போது அதை வீட்டில் எடுத்து வைத்துவிட்டு செல்வது நல்லது.

Read Previous

ஒரு மாதம் இதை சாப்பிடுங்கள் இப்படி ஆகிவிடலாம்..!!

Read Next

8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மரம்.. கண்டுப்பிடித்து ஆச்சர்யத்தை கூறிய ஆராய்ச்சியாளர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular