பெண்கள் பாதுகாப்பு, லாக் அப் மரணத்தில் யார் கடமை தவறினாலும் கடுமையான நடவடிக்கை இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற சட்டம், ஒழுங்கு நிலை கூட்டம் குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரானாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும். குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.




