கோபப்படாமல் யோசித்தால் தீர்வு வரும் என்கிறார்கள், எப்படி?
என் மகன் L K G படிக்கும் போது 2 பிஸ்கட் ஸ்நாக்ஸ் ஆக குடுத்து விடுவேன்.
ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததும்
ஸ்நாக்ஸ் இரண்டு பிஸ்கட் கொடுத்து விட்டேனே சாப்டியா? என்று கேட்டேன் …
இல்லை மம்மி அங்கு ஆயா ஒரு பிஸ்கட்டை எடுத்து விடுவதாக மகன் சொன்னான்…
எனக்கு கோபம் வந்தது. நாளை வந்து ஆசிரியரிடம் பேசுகிறேன் என்றேன்..
ஒரு கணம் யோசித்தேன் 60 வயது ஆயா பாவம் என்று தோணியது..
இருப்பினும் மகனுக்கு பசிக்குமே என்று தோன்றியது.
அடுத்த நாள் 3 பிஸ்கட் குடுத்து விட்டேன்
இப்போது மகனுக்கும் 2 பிஸ்கட் கிடைத்தது….ஆயாவுக்கும் ஒரு பிஸ்கட் கிடைத்தது,




