மும்பை: மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில், குழந்தைக்கு DNA சோதனை நடத்த உத்தரவிட முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011-ல் திருமணம் செய்துகொண்ட தம்பதி, 2013-ல் பிரிந்து சென்றது. மனைவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் கணவர் கூறி விவாகரத்து கோரினார். இந்த நிலையில், குழந்தைக்கு DNA சோதனை கோரிய கணவரின் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.




