திண்டுக்கல் தாடிக்கொம்பில் சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் ஞானக் கடவுளான ஹயக்ரீவரை தரிசித்தால், கல்வி சம்மந்தமான தோஷங்கள் நீங்கி, கல்வி அறிவு பெருகுமாம். மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில், ஹயக்ரீவருக்கு நடக்கும் திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்துகொண்டு, நோட்டு, பேனா, தேன், ஏலக்காய் மாலையுடன், ஹயக்ரீவருக்கு சாற்றி, பூஜித்து வந்தால், தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.




