ஒன்றிய அரசு பெண்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் ‘முத்ரா யோஜனா’ திட்டம், பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எதையும் அடமானம் வைக்காமல் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். சிறு வணிகம், சலூன், உணவகம், கைதொழில் போன்ற துறைகளில் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.




